இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு நிறைய செலவாகும். மொழி தெரியாது, லோக்கல் கைடு தேட வேண்டும், ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வலி எப்படி கண்டுபிடிப்பது என்று பல சிக்கல்கள் தோன்றும். அதை எளிதாக்க தான் IRCTC வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை வழங்கி வருகிறது.
அப்படி இந்த அக்டோபர் மாதம் செல்லக்கூடிய இலங்கை ராமாயண யாத்திரை பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்று வரும் அற்புதமான பேக்கேஜ் மற்றும் அதில் பார்க்க கூடிய விஷயங்களை பற்றி விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் சொல்லயிருக்கிறோம்.
பயண விபரம்:
IRCTC தற்போது சென்னையில் இருந்து இந்தியாவின் அருகே உள்ள இலங்கைக்கு ‘ சென்னையில் இருந்து கதிர்காமத்துடனான ராமாயணத்தின் தடங்கள் (SMO30) தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள் அடங்கிய இந்த பயணத் தொகுப்பில் கண்டி – நுவரெலியா – கொழும்பு – கதிர்காமம் போன்ற இடங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். சென்னையில் இருந்து 13.10.2023 அன்று தொடங்க இருக்கிறது.
விமான விவரங்கள்: –
| விமான எண் | புறப்படும் இடம் | புறப்படும் தேதி | புறப்படும் நேரம் | சேருமிடம் | சேரும் தேதி | சேரும் நேரம் |
| UL-122 | சென்னை | 13.10.2023 | 10.00 மணி | கொழும்பு | 13.10.2023 | 11.25 மணி |
| UL-123 | கொழும்பு | 18.10.2023 | 13.40 மணி | சென்னை | 18.10.2023 | 15.05 மணி |
ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களில் புராண அரக்க மன்னன் ராவணனின் தீவுக் கோட்டையின் தலைநகருக்கு லங்கா என்று பெயர். திரிகூட மலைகள் என்று அழைக்கப்படும் மூன்று மலைச் சிகரங்களுக்கு இடையே ஒரு பீடபூமியில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது. பண்டைய நகரமான லங்காபுரா ஹனுமானால் எரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அதன் மன்னன் ராவணன், சீதையை கடத்தி அழைத்து செல்ல, சீதையை மீட்கள் ராமன், ராவணனுடைய சகோதரன் விபீஷணன் உதவியுடன் ராவண வாதம் செய்த பிறகு விபீஷணன் லங்காபுர மன்னனாக முடிசூட்டப்பட்டான். இந்த சம்பவங்கள் சார்ந்து அங்கு ராமாயணம் சார்ந்த பல இடங்களும் கோவில்களும் உள்ளன
இதையும் பாருங்க : IRCTC இல் வெறும் 45000க்கு சென்னை டூ வடகிழக்கு இந்தியா சூப்பர் ட்ரிப் பேக்கேஜ்.. விபரங்கள் இதோ…
ராமாயணம் மட்டும் இல்லாமல் மகாபாரதத்திலும் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டவர்கள் காலத்தில் அவரது சந்ததியினர் லங்கா ராஜ்யத்தை ஆண்டதாக கூறப்படுகிறது. மகாபாரதத்தின் படி, பாண்டவ சகாதேவன் யுதிஷ்டிரனின் ராஜசூயத்திற்காக தெற்கு இராணுவ பிரச்சாரத்தின் போது இந்த ராஜ்யத்திற்கு விஜயம் செய்தார் என்று கூறப்படுகிறது. அந்த சிறப்புவாய்ந்த இலங்கைக்கு தான் இந்த பயணம் அழைத்து செல்லயிருக்கிறது.
பயண திட்டம் :
நாள் 1: சென்னையில் இருந்து இலங்கையை அடைந்து, விமான நிலையத்திலிருந்து நீர்கொழும்பு(Negombo) மற்றும் சிலாபம் சென்று அங்குள்ள முக்கிய இடங்களை சுற்றிபார்க்கலாம். குறிப்பாக சிலாபம் முனீஸ்வரம் கோயில், மானாவாரி கோயில் ஆகிய இடங்களை பார்த்துவிட்டு இரவு முழுவதும் நீர்கொழும்பில் தங்கலாம்.
நாள் 2 : கண்டியில் மதிய உணவு மற்றும் கண்டியில் நகர சுற்றுப்பயணத்திற்கு செல்ல லேக் டிரைவ், ஜெம் மியூசியம், பட்டு கடை, பாடிக் ஷாப்பிங், கண்டி தாவரவியல் பூங்கா, நுழைவு டிக்கெட்டுகளுடன் கலாச்சார நிகழ்ச்சி ஆகியவை அடங்கும். கண்டியில் இரவு தங்குதல்
நாள் 3: காலை சிற்றுண்டி, பின்னவல – யானைகள் பாதுகாப்பு இல்லம், மதிய உணவுக்குப் பிறகு அனுமான் கோயில், ரம்பொட நீர்வீழ்ச்சி, தேயிலைத் தொழிற்சாலை, சீதா அம்மன் கோயில், நுவரெலியாவில் நகரப் பயணம் அழைத்து செல்லப்படும். இரவு நுவரெலியாவில் தங்கவும்.

நாள் 4 : ஹோட்டலில் காலை உணவு மற்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமத்திற்கு பயணம். மதிய உணவுக்குப் பிறகு எல்ல இடைவெளியைப்(ELLA GAP ) , கதிர்காமன் கோயிலுக்குச் செல்லலாம் . கதிர்காம ஹோட்டலில் இரவு உணவு மற்றும் இரவு தங்குதல்
நாள் 5: ஹோட்டலில் காலை உணவு முடித்துவிட்டு கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு திரும்புதல். இலங்கையில் ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பார்த்து மதிய உணவுக்குப் பிறகு கொழும்பு நகரத்திற்குச் செல்வது. கொழும்பில் உள்ள ஹோட்டலில் இரவு உணவு மற்றும் இரவு தங்குதல்
நாள் 6: காலை உணவுக்குப் பிறகு கொழும்பில் ஷாப்பிங் செய்யலாம் , மதிய உணவுக்குப் பிறகு கொழும்பில் இருந்து விமான நிலையத்திற்கு சென்று 13.40 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்படும்.
பயணத்திற்கான கட்டணம் :
5 இரவுகள் 6 நாட்கள் கொண்ட பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 65800 மற்றும் ₹ 63500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹ 90500/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய 2-11 வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹45500 மற்றும் படுக்கையில்லாத 2-11 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ₹ 35500/- என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் பாருங்க : ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இந்த இடங்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் பொருளாதார வகுப்பில் சென்று & திரும்பும் விமான டிக்கெட், விசா கட்டணங்கள், 3 நட்சத்திர ஹோட்டல் தங்குமிடங்கள், 05 காலை உணவுகள், 06 மதிய உணவுகள், 05 இரவு உணவுகள், நுழைவுச் சீட்டுகள், தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்க உணவு தான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட எண்ணினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
தொகுப்பில் என்ன சேர்க்கப்படவில்லை:
விமான நிலைய வரிகள், எரிபொருள் கூடுதல் கட்டணம், ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு தரும் கூடுதல் செலவுகள், குறிப்பிட்ட பேக்கேஜ் சேவுகள் தவிர்த்து தனிப்பட்ட மது, உணவு மற்றும் பானங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் பேக்கேஜில் சேராது. அதுபோக விசா கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், வித்தியாசத் தொகையை கூடுதலாகச் செலுத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கான பயணக் காப்பீட்டுச் செலவு கூடுதலாக இருக்கும், அதே அளவு காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.