அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு – சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவில் இணைந்தார். ஆற்றல் அசோக் குமார் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகா, கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மறுபக்கம் அசோக் அடுத்தடுத்து மோசடி வழக்குகளில் சிக்கி வருகிறார்.மோசடி…









