திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி, மலை பாதையில் போலீஸ் குவிப்பு – கள நிலவரம்
படக்குறிப்பு, நேற்று (டிசம்பர் 3) கோவிலில் வழக்கம் போல ஏற்றப்பட்ட தீபம்4 டிசம்பர் 2025, 12:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை…









