Monthly Archives: November, 2025

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம், Getty Images11 நவம்பர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.”நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.…

பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்! | The Australian player who scored a century without hitting a single boundary

1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா…

மாலியில் கடத்தப்பட்ட5 இந்தியர்களில் இருவர் தமிழர்கள் – உறவினர்கள் பிரதமர், முதல்வரிடம் உதவி கோரிக்கை | Five Indians Kidnapped in West Africa: Two Tamils; Families Appeal for Rescue

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் கடத்தப்பட்ட…

CSK: ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே-வின் கன் பிளேயர்; வெளியிடக்கூடாது என ரெய்னா ஆதரவுக்குரல் | Ravindra Jadeja is CSK’s gun player; Raina supports him

இது சி.எஸ்.கே ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திவரும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரான `மிஸ்டர் ஐ.பி.எல்” சுரேஷ் ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான உரையாடலில் பேசிய சுரேஷ் ரெய்னா, “நூர் அகமது தக்கவைக்கப்பட வேண்டும். அவர் ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னர். எனவே, அவர் முக்கியமாகத் தக்கவைக்கப்பட வேண்டும்.தோனி இந்த சீசன் ஆடுகிறார், எனவே அவரைத் தக்கவைக்க வேண்டும். ருத்துராஜ் கேப்டனாகத் தொடர வேண்டும்.ஜடேஜா – ரெய்னாஜடேஜாவை மீண்டும் தக்கவைக்க வேண்டும்.…

டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் எவை?

பட மூலாதாரம், Reuters36 நிமிடங்களுக்கு முன்னர்(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்) டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்குப் பிறகு, காவல்துறை மற்றும் புலனாய்வு…

உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் டை-பிரேக்​கர் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. டை-பிரேக்​கர் சுற்​றின் 2-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் கார்த்​திக் வெங்​கட்​ராமன், ரொமேனியா​வைச் சேர்ந்த கிராண்ட்​மாஸ்​டர் போக்​டான் டேனியல் டீக்​குடன் மோதி​னார். 43-வது நகர்த்​தலில் போக்​டான் டேனியல் டீக்கை தோற்​கடித்​தார் கார்த்​திக். இதன்​மூலம் 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளார் கார்த்​திக் வெங்​கட்​ராமன். 3-வது சுற்​றின் டை பிரேக்​கர் ஆட்​டத்​தில் இந்​திய வீரர் விதித் குஜ்​ராத்​தி, அமெரிக்க வீரர்…

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன் | WTA Finals Tennis Elena Rybakina is the champion

ரியாத்: சவுதி அரேபி​யா​வின் ரியாத்​தில் நடை​பெற்று வரும் டபிள்​யூடிஏ பைனல்ஸ் டென்​னிஸ் போட்​டி​யில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலீனா ரைபாகினா சாம்​பியன் பட்​டம் வென்​றார். 8 முன்​னணி வீராங்​க​னை​கள் பங்​கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வார​மாக ரியாத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திச் சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான ரைபாகி​னா, முதல் நிலை வீராங்​க​னை​யும், பெலாரஸ் நாட்​டைச் சேர்ந்​தவரு​மான அரினா சபலெங்கா​வுடன் மோதி​னார். இதில் ரைபாகினா 6-3, 7-6 (7/0) என்ற செட்…

டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?35 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.நிகழ்விடத்தில்…

‘எவ்வளவோ சர்வதேச தொடர்களை தமிழ்நாட்டில் நடத்திவிட்டோம்!’ – ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை குறித்து உதயநிதி பெருமிதம்! |Udhayanidhi Stalin Proudly Says: ‘Tamil Nadu Has Hosted Several International Tournaments!’

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம். நன்றி

1 18 19 20 21 22 30