‘விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!” – சொல்கிறார் கே.என்.நேரு
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,”தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது…