Daily Archives: May 15, 2025

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றுமா குடியரசுத் தலைவரின் கேள்வி?

பட மூலாதாரம், Getty Images10 நிமிடங்களுக்கு முன்னர்’ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச ​​நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா’ என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ‘குறிப்பு’ (Presidential reference) ஒன்றை அனுப்பியுள்ளார்.இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், “மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?”…

‘சியர் லீடர்ஸ், டிஜே வேண்டாம்’ – கவாஸ்கர் வலியுறுத்தல் மீது பிசிசிஐ பரிசீலனை? | sunil gavaskar says no cheerleaders dj in ipl 2025 bcci considers

மும்பை: நடப்பு ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் சியர் லீடர்ஸ் மற்றும் டிஜே போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அதை பிசிசிஐ பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது நடப்பு சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள். இந்நிலையில், போர் நிறுத்த அறிவிப்பின் எதிரொலியாக, வரும் சனிக்கிழமை (மே 17) முதல் எஞ்சியுள்ள…

DD Next Level; santhanam; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கோவிந்தா கோவிந்தா சர்ச்சையான நிலையில், அப்பாடலின் டியூனை படத் தயாரிப்பு நிறுவனம் மியூட் செய்திருக்கிறது

நடிகர் சந்தானம் நடித்துள்ள “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)’ திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலுக்கெதிராக ஒருதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.இப்பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.சென்னை உயர் நீதிமன்றம்தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல் வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில்…

CSK; MI; Ayush Mhatre; சென்னை அணி தன்னை எப்படி எடுத்தது, அதை முதலில் தனக்கு யார் சொன்னது என்பது பற்றி ஆயுஷ் மாத்ரே பகிர்ந்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், அடுத்த சீசனுக்கான வீரர்களைக் கண்டெடுக்கும் வகையில் சென்னை அணி கடந்த ஐந்து போட்டிகளாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.அவ்வாறு, ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக தொடரின் பாதியில் எடுக்கப்பட்ட 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, சென்னை அணிக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடிவருகிறார்.சூர்யகுமார் யாதவ் -…

நைஜீரியா: சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் பெண்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்24 நிமிடங்களுக்கு முன்னர்நைஜீரியாவில் கேகே மருவா என அழைக்கப்படும் இந்த ஆட்டோக்கள் அங்கு மலிவான மற்றும் பிரபலமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த வேலையில், பொருளாதார நெருக்கடியால் பெண்களும் இப்போது ஆட்டோ ஓட்டுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் இறந்த பின் யெமிசி ஆட்டோ…

‘கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர்’ – அஸ்வின் ‘டிக்’ செய்வது ஏன்? | ashwin backs bumrah for team india test captaincy role

சென்னை: அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை ஆதரித்துள்ளார் அஸ்வின். “இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள அணியில் இடம்பெறுகின்ற அனுபவ வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பார்.…

Ananda Vikatan – 21 May 2025 – ஜோக்ஸ்..!

‘‘எங்கள் தலைவர் திஹார் சிறையில் இருந்தவர்தான், அதற்காக அவர்மீதான குற்றப்பத்திரிகையை இந்தியில் தயார் செய்து அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை…’’Published:Today at 12 AMUpdated:Today at 12 AMஜோக்ஸ்..! Source link

IPL 2025 : ‘ஐ.பி.எல் இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Temporary Replacement விதிமுறையை பற்றிய விளக்கம்!

‘அணிகளின் பிரச்னை!’ஆனால், எஞ்சியிருக்கும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தாமதமாக தொடங்குவதால் பல வெளிநாட்டு வீரர்களாலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்லர், ஸ்டார்க், ஹேசல்வுட், ரூதர்போர்டு போன்ற முக்கியமான வீரர்களே போட்டிகளை தவறவிடுகின்றனர். இதனால் பெரும்பாலான அணிகள் பாதிப்படைகின்றன.இதற்கு தீர்வு காணும் வகையில் ‘Temporary Replacement’ என்ற பெயரில் தற்காலிகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி தற்காலிகமாக ஒப்பந்தம் செய்யும் வீரர்களை அடுத்த சீசனுக்காக ரீட்டெய்ன் செய்ய முடியாது. நன்றி

‘கட்டிப்பிடி வைத்தியம்’ – கட்டணம் கட்டி சிகிச்சை எடுப்பதால் என்ன பலன்?

பட மூலாதாரம், Danny Fullbrook/BBCகட்டுரை தகவல்இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், ‘கடுல் புடுல்’ (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர். பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார். மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது…

ஐபிஎல் அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்க்கலாம்: விதிகள் சொல்வது என்ன? | ipl teams can replace new foreign players temporarily for withdrawal players rules

சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், தேதிகள் மாற்றப்பட்ட காரணத்தால் விளையாட முடியாத வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்றாக வேறு வீரர்களை 10 ஐபிஎல் அணிகளும் சேர்க்கலாம் என ஐபிஎல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. அந்த புதிய விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து பார்ப்போம். மே 17 முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் ஐபிஎல்…