Daily Archives: May 13, 2025

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.Operation Sindoor…

Virat Kohli : “1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி” – உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்! | australian media praising indian cricketer virat kohli

இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்வின் அடுத்தகட்ட பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மறுபக்கம், ஆஸ்திரேலிய ஊடகங்கள் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை அலாதியாக புகழ்ந்து எழுதி வருகின்றன.விராட் கோலிசிட்னி மார்னிங் போஸ்ட்:”கோலியின் அபார பேட்டிங் திறமை, களத்தில் ஆக்ரோஷம் ஆகியவற்றின் கலவை, ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் சொந்த நாட்டு வீரர்கள் சிலரை நினைவுபடுத்தியது.”ABC (Australian Broadcasting…

பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு – தண்டனை என்ன?

பட மூலாதாரம், Special arrangementபடக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.13 மே 2025, 05:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த…

ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்? | Why does Greg Chappell admire Virat Kohli

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவது ஓர் இடி முழக்கம் போன்ற சகாப்தத்தைக் குறிக்கிறது என்றும், அவருடைய காலக்கட்டம் மன உறுதி, தீரம் மற்றும் துணிச்சலால் நிரம்பியது என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் வானளாவ புகழ்ந்துள்ளார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் அவர் எழுதியதில் இருந்து சில பகுதிகள் இதோ: விராட் கோலியின் ஓய்வு சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே…

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! – வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்காக பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவாமி லீக் மற்றும் அதன் தலைவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்திதளம் தெரிவித்துள்ளது. Chief Adviser Professor Muhammad…

Kohli: “இங்கிலாந்தில் பார்ப்போம் என்று நினைத்தோம், ஆனால்..” – கோலி ஓய்வு குறித்து பயிற்சியாளர்

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி நேற்று (மே 12) அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோலியின் ஓய்வு முடிவு குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் சரந்தீப் சிங் பேசியிருக்கிறார். விராட் கோலி“சில வாரங்களுக்கு முன்பு நான் விராட் கோலியிடம் பேசினேன், இங்கிலாந்து தொடருக்கு தயாராவதற்காகக் கவுண்டி கிரிக்கெட்டில்…

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு – விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்13 மே 2025, 02:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க…

அதிக இரட்டை சதங்கள் முதல் வெற்றிகரமான கேப்டன்சி வரை: விராட் கோலியின் வியத்தகு சாதனைகள்! | Kohli in Tests: Six double-tons in 18 months, and India most successful captain

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம்…

Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' – காவல்துறை விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்தியா, பாகிஸ்தானின் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பகுதி, பயங்கரவாத முகாம்களையு குறி வைத்துத் தாக்கியது. பாகிஸ்தான் வான் வழியிலான ட்ரோன் தாகுதல்களை…

IPL Schedule : ’17 போட்டிகள்; 6 மைதானங்கள்; இந்தியா – பாகிஸ்தான் பதற்றத்தால் நிறுத்தப்பட்டிருந்த ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை!

இந்நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல் யை மீண்டும் தொடங்குவதற்கான வேலைகளும் ஜரூராக ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்துதான் இப்போது புதிய அட்டவணை ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.கடைசியாக பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி உட்பட 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 17 ஆம் தேதி பெங்களூரு vs கொல்கத்தா போட்டியோடு ஐ.பி.எல்…