Daily Archives: May 8, 2025

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது உடல் புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 நாள்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணிகள்! | Indian teams in the Archery World Cup final

வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய…

பாகிஸ்தானில் 9 இடங்களை தாக்கியது ஏன்? இந்தியா அளித்த விளக்கம்

பட மூலாதாரம், Getty Images8 மே 2025, 09:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.ஆனால் இந்தத் தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.…

Rohit: “ரோஹித் ஓய்வுபெற்றுவிட்டாரா?”- செய்தி கேட்டு அதிர்ச்சியான ரஹானே; கடைசியாக சொன்ன அந்த வார்த்தை

இத்தகைய சூழலில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கேப்டன்சிலியிலிருந்து ரோஹித் நீக்கப்படப்போவதாக நேற்று தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது.இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக நேற்று மாலை அறிவித்தார் ரோஹித். ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரோஹித், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.இந்த நிலையில், ரோஹித்தின் இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அஜின்க்யா ரஹானே அதிர்ச்சியடைந்திருக்கிறார். அஜின்க்யா ரஹானேநேற்றைய கொல்கத்தா vs சென்னை…

dmk; duraimurugan; stalin; ragupathi; திமுக அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிம வளத்துறை இலாகா, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம்

தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கு மாற்றப்பட்டது.திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன்அதேபோல், சர்ச்சைக்குரிய பேச்சு சம்பவத்துக்குப் பிறகு பொன்முடியின் வனத்துறை இலாகா, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் வசமிருந்த கனிம வளத்துறை இலாகா, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆளுநர் மாளிகைஅதேபோல், ரகுபதியிடமிருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த…

பிரெவிஸ், துபே அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே | ஐபிஎல் 2025 | Kolkata Knight Riders vs Chennai Super Kings Highlights, IPL 2025

ஐபிஎல் சீசனின் 57வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் குர்பாஸ் 11, சுனில் நரேன் 26 ரன்கள் எடுத்தனர். ரஹேனே 48 ரன்கள் விளாசினார். ரகுவன்ஷி 1, மணீஷ் பாண்டே 36, ஆண்ட்ரே…

இந்திய தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு விவரித்த பெண் ராணுவ அதிகாரிகள் யார்?

பட மூலாதாரம், Ministry of External Affairs, Indiaபடக்குறிப்பு, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி7 மே 2025புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில்…

Dhoni : 'கொல்கத்தாவும் என்னோட சொந்த ஊர்தான்!' – ஈடன் கார்டனில் நெகிழ்ந்த தோனி

‘கொல்கத்தா vs சென்னை!’கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே வென்றார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.ஈடன் கார்டன்’தோனி பேசியவை!’டாஸில் தோனி பேசுகையில், ‘இங்கே கொல்கத்தாவில் நான் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன். U16, U19, க்ளப் லெவல் போட்டிகள், பிராந்திய அளவிலான போட்டிகள் என ஈடன் கார்டனிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நிறைய ஆடியிருக்கிறேன்.இதுவும் எனக்கு சொந்த…

KKR vs CSK : ‘பெளலிங்கில் அசத்திய நூர் அஹமது; பேட்டிங்கில் அசத்திய டெவால்ட் ப்ரெவிஸ்!’ – கொல்கத்தாவை எப்படி வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

‘சென்னைக்கேற்ற போட்டி!’ஆனால், இன்றைய போட்டி சென்னை அணிக்கு ஏற்ற வகையில் அமைந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் கொல்கத்தா அணி பவர்ப்ளே முடிவில் 67 ரன்களை எடுத்திருந்து. குர்பாஸ் மட்டும்தான் அன்ஷூல் கம்போஜின் பந்தில் அவுட் ஆகியிருந்தார்.இதனால் கொல்கத்தா அணி 200-220 ரன்களை நோக்கி செல்கிறதோ என தோன்றியது. ஆனால், 7-15 இந்த மிடில் ஓவர்களில் சென்னை அணி 57 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தது.…

உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு | Sachin Tendulkar welcomes Operation Sindoor

ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுளள பதிவில் கூறியுள்ளதாவது: ஒற்றுமையில் நாம் அச்சமற்று இருக்கிறோம். அதேபோல் வலிமையில் எல்லையற்றதாக இருக்கிறோம். இந்தியாவின் கேடயம் அதன் மக்கள். ஒற்றுமைக்கான செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும்போது இந்த உலகில் தீவிரவாதத்துக்கு இடம் கிடையாது. நாங்கள் ஒரே அணி. ஜெய்ஹிந்த். இவ்வாறு…