Daily Archives: April 15, 2025

“முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்” – குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  துறை இணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்சூர் தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற நிலையில் பல்வெறு வழிபாடுத்தலங்களில்…

மாஸ்டர் பிளாஸ்டர் விவ் ரிச்சர்ட்ஸின் அதிவேக சதம் | மறக்க முடியுமா? | Master Blaster Viv Richard fastest century | Can you forget it?

இன்றையக் காலக்கட்டத்தில் டி20 பேட்டிங் குறுகிய கால சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிக் காலி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், கிரிக்கெட் உலகின் என்றென்றைக்குமான சூப்பர் ஸ்டார் ஒருவர் உண்டெனில், அது விவ் ரிச்சர்ட்ஸ்தான். 1986-ம் ஆண்டு இன்றைய தினமான ஏப்ரல் 15-ம் தேதியன்று ஆண்டிகுவா மைதானம் ஓர் உலக சாதனையைக் கண்டது. விவ் ரிச்சர்ட்ஸ் என்னும் மேதை 56 பந்துகளில் சதம் கண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிவேக சதம் அடித்த உலகச் சாதனையை இங்கிலாந்து பந்து வீச்சை நார்…

சரியாக படிக்கவில்லை எனில் பள்ளியை விட்டு நீக்கலாமா? – கோவை பள்ளியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்தங்கள் மகள் சரியாகப் படிக்கவில்லை என்றால் நாங்களே மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொள்கிறோம் என்று கோவையிலுள்ள தனியார் பெண்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு குழந்தையின் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, 100 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் வகுப்பு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.பள்ளி நிர்வாகத்தின் ஒப்புதலின்றி இப்படி எழுதி வாங்கியிருக்க வாய்ப்பில்லை என்று…

Shreyas Iyer : ‘ஐ.சி.சியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரேயாஷ் ஐயர்!’ – பின்னணி என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஸ்ரேயஸ் ஐயர்இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரராக இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நன்றி

Ambulance: “சட்டைக்கூட இல்லாமல்.." சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! – யார் இவர்?

கேரள மாநிலம் திருச்சூர் எங்கண்டியூரில் உள்ள எம்ஐ மிஷன் மருத்துவமனைக்கு வேகமாக வந்து நின்றது ஒரு ஆம்புலன்ஸ். சட்டைக்கூட அணியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆம்புலன்சிலிருந்து அவசரமாக இறங்கி, மயக்கமடைந்த நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் கட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அதிகம் தேடப்பட்டது.அஜ்மல் அந்த இளைஞர் பெயர் அஜ்மல் (24). சம்பவத்தன்று நடந்த நிகழ்வை…

அதிர்ச்சி தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப்? – கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் இன்று மோதல் | PBKS Vs KKR, IPL 2025 match prediction

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது பஞ்சாப் அணி.…

டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து மூழ்கிய கடைசி நிமிடங்களில் உள்ளே என்ன நடந்தது? புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்டைட்டானிக் கப்பல் குறித்து முழுமையான டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான பகுப்பாய்வு, அழிந்த அக்கப்பலின் இறுதி மணித்துளிகள் பற்றி புதிய விவரங்களை அளித்துள்ளது.1912 ஆம் ஆண்டில் பனிப்பாறையில் மோதிய பின்னர் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது, ​​அந்த கப்பல் எவ்வாறு இரண்டாகக் உடைந்தது என்பதைக் காட்டும் முப்பரிமாண படம், அந்த பேரழிவில் 1,500 பயணிகள் உயிரிழந்ததை வெளிப்படுத்துகின்றது.டைட்டானிக் கப்பலில் இருந்த கொதிகலன் அறையின் புதிய காட்சி…

LSG vs CSK : வேலைக்காகாத மிடில் ஆர்டர்; எகிறிய ரன்ரேட்; எப்படி போட்டியை வென்றார் தோனி?

‘சென்னை வெற்றி!’ஒருவழியாக சென்னை அணி தொடர் தோல்விகளிலிருந்து மீண்டுவிட்டது. லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வென்றிருக்கிறது. ஆனால், அவ்வளவு எளிதாகவெல்லாம் வெல்லவில்லை. அவர்களின் ட்ரேட்மார்க் ஸ்டைல்படியே கடைசி வரை ப்ரஷர் ஏற்றியே வென்றிருக்கின்றனர். சென்னை அணி எப்படி வென்றது? குறிப்பாக டெத் ஓவர்களில் தோனியும் சிவம் துபேயும் எப்படி போட்டியை முடித்து வைத்தார்கள்?Dhoni’மிடில் ஓவர் சொதப்பல்!’சென்னை அணி பவர்ப்ளேயில் 59 ரன்களை எடுத்திருந்தது. சென்னை அணி இப்போது இருக்கும் நிலையில் இது ரொம்பவே…

Dhoni Speech: 'எனக்கு ஏன் அவார்ட் கொடுத்தீங்க?' – ஆட்டநாயகன் தோனி ஜாலி பேட்டி

‘சென்னை வெற்றி!’லக்னோவுக்கு எதிரான போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக சென்ற சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து தோனி போட்டியை முடித்து வைத்தார். தோனிக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிய தோனி, ‘இதை ஏன் எனக்கு கொடுத்தீங்க!’ என ஜாலியாகவும் கேட்டிருக்கிறார்.Dhoni’வெற்றிக்குப் பின் தோனி பேசியவை!’தோனி பேசியதாவது, ‘ஐ.பி.எல் மாதிரியான தொடர்களில் வெற்றி ரொம்பவே முக்கியம். துரதிஷ்டவசமாக சில போட்டிகளின் ரிசல்ட் எங்களுக்கு…

5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி | CSK vs LSG | LSG vs CSK LIVE Cricket Score, IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அஸ்வின் மற்றும் கான்வே சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக ஷேக் ரஷீத் மற்றும் ஓவர்டன் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றனர். லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ்…