Daily Archives: October 6, 2024

`தீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A.G.Noorani' – Frontline Journalist R Vijaya Sankar Speech

ஏ.ஜி.நூரானி 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த அறிவார்ந்த ஆளுமைகளுள் ஒருவர். வழக்கறிஞரான இவர் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய தேசம் கண்ட அரசியல் சமூக நீதித்துறைச் சார்ந்த பிரச்சனைகள் குறித்து தனது புலமையின் வழி கட்டுரைகளையும் புத்தகங்களையும் படைத்து வரலாற்று ஆவணங்களாக விட்டுச் சென்றிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது 93 வயதில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்திருந்தார். இறக்கும் வரைக்குமே தொடர்ச்சியாக சமூகம் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எழுதிக்கொண்டேதான் இருந்தார். இந்துத்துவ அடிப்படைவாத…

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – வங்கதேசம் இன்று மோதல் | India vs Bangladesh clash in first T20I cricket match today

குவாலியர்: இந்தியா – வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி குவாலியரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7…

தமிழ்நாடு: சிறைகளில் கைதிகள் மீது சாதிரீதியாக பாகுபாடு காட்டப்படுகிறதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னரும் சாதி பாகுபாடு என்ற தீமையை அகற்ற முடியாமல் இருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்5 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்’இந்தியாவில் உள்ள சிறைகளில் சாதிப் பாகுபாடுகள் காட்டக்கூடாது’ என வியாழன் அன்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.”தமிழக சிறைகளில் பாகுபாடுகளைக் களைய சிறை விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறுகிறது.ஆனால்…

மகளிர் கால்பந்து போட்டி இன்று தொடக்கம் | Women s football tournament starts today

Last Updated : 06 Oct, 2024 07:15 AM Published : 06 Oct 2024 07:15 AM Last Updated : 06 Oct 2024 07:15 AM கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே உண்டு உறைவிடப்பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி இன்று (6-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களைச் சேர்ந்த 30 பள்ளிகளைச் சேர்ந்த அணிகளும் மற்றும்…

`காங்கிரஸ் இளைஞர்களை போதையில் தள்ளியது!' – மும்பையில் பிரதமர் மோடி காட்டம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திட்டங்களை திறந்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார். முதலில் வாசிம் மாவட்டத்தில் கால்நடைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்தார். மொத்தம் 23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மும்பை வந்தார். மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் நடந்த நிகழ்ச்சியில் ஆரே காலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா வரை பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள முதல் மெட்ரோ…

“இரட்டை சதத்தில் எனக்கு 100, என் தம்பிக்கு 100'' – இரட்டை சதம் விளாசிய சர்ஃபராஸ் கான் நெகிழ்ச்சி!

மும்பை – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சி சாம்பியனான மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி சார்பாக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் 286 பந்துகளில் 25 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் இரானி கோப்பை…

காஞ்சிபுரம்: பாலியல் தாக்குதலில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (சித்தரிப்புப் படம்)கட்டுரை தகவல்காஞ்சிபுரத்தில் 5 வயது சிறுவனை கொன்றதாக போக்சோ சட்டத்தின் கீழ் 34 வயதான அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக இதுபோன்ற புகார்கள் அதிகம் வருவதாக கூறுகிறார், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.போக்சோ குற்றங்களுக்கு யார் காரணம்? குழந்தைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?இந்த வழக்கில் கைதாகியுள்ள அரசு ஊழியரின் பெயர் ராஜேஷ். காஞ்சிபுரம் நில அளவைத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ்,…

‘அனைவரையும் முயற்சித்து விட்டோம்; அவர் ஒருவர் மட்டுமே மீதி’ – பாகிஸ்தானின் அடுத்த கேப்டன் யார்? | He is the only option left who will be Pakistan s next captain

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அஸம் விலகியதையடுத்து அடுத்த கேப்டனாக தேர்வு செய்வதற்கு அனைவரையும் முயற்சி செய்து விட்ட நிலையில் முகமது ரிஸ்வான் மட்டுமே மீதமுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் தொடக்க வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார். ஆனால், முகமது ரிஸ்வான் மீது வீரர்களுக்கோ, அணி நிர்வாகத்திற்கோ அவ்வளவு திருப்தியில்லை என்பதையும் முடாசர் நாசர் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை. பாபர் அஸம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை உதறிய பிறகு அங்கு பெரிய…

“சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி…ரெடியா இருங்க மக்களே!” – ஏன்? எதற்கு?|Importance of Indian Air Force event

ஒருவேளை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டினால், ‘அதிக மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி’ என்கிற பெயரில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடிக்கலாம்.சாதனை முயற்சி!இந்தியாவில் விமானப்படை 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 92 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிகழ்வை குறிக்கும்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படும். ஆனால் 2022-ம் ஆண்டு முதன்முதலாக டெல்லிக்கு வெளியே சண்டிகரில் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன்முதலாக…

Women’s T20 WC: ஏமாற்றப்பட்டதா இந்திய அணி?; சர்ச்சைக்குள்ளான ரன் அவுட்; முதல் போட்டியிலேயே தோல்வி! | Ind Vs Nz Women’s T20 WC match report: Defeat in the first match

நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்யப்போவதாகவும் அறிவித்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்திருந்தது. பந்துவீச்சில் இந்திய அணி இரண்டு இடங்களில் கோட்டை விட்டிருந்தது. பவர்ப்ளேயில் நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடியை கொடுத்திருக்க வேண்டும். ஒன்று விக்கெட் எடுத்திருக்க வேண்டும், இல்லை ரன்களை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இது இரண்டையுமே இந்திய பௌலர்கள் செய்யவில்லை.சூசி பேட்ஸூம், பிலிம்மரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு…