Daily Archives: October 1, 2024

Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Ind vs Ban: "என்னைச் சுதந்திரமாக விளையாடச் சொன்ன இருவர்…" – நெகிழ்ந்த ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாகக் கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.…

சோஃபி பூன்ஸ்: உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்லை இவர் உருவாக்கியது எப்படி?

பட மூலாதாரம், University of the West of Englandபடக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது.கட்டுரை தகவல்செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில் நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை…

அதிவேக 27,000 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி! | Fastest 27,000 runs: Virat Kohli breaks Sachin record

திங்களன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தனது 594-வது இன்னிங்ஸில் 27,000 ரன்களை அதிவேகமாக எட்டிய விராட் கோலி, லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை விஞ்சினார். கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 27,000 சர்வதேச ரன்களை கடந்த நான்காவது பேட்டர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். 35 வயதாகும் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 27 ஆயிரம் ரன்களை விரைவு கதியில் கடந்து…

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை பெண் ஆசிரியர் போக்சோவில் கைது!

கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.பாலியல் தொல்லை அந்த மாணவியின் வகுப்புக்கும், சௌந்தர்யா தான் சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். அந்த மாணவியிடம் சௌந்தர்யா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே சௌந்தர்யா, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.இது குறித்து அந்த மாணவி,…

Ind vs Ban: 'அதிரடி வேட்டை நடத்தும் இந்தியா!' – முடிவை நோக்கி கான்பூர் டெஸ்ட்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டி டிராவை நோக்கியே நகரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு அணிகளுமே அதிரடியாக உத்வேகத்துடன் ஆடி போட்டியை முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் முனைப்பில் ஆடி வருகின்றனர்.Rohit & Jaiswalஇன்றைய நாளின் தொடக்கத்துக்கு முன்பாக 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. வங்கதேச அணி 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.…

ஹைதராபாத்: இறுதி ஊர்வலத்திற்கு பறை வாசிக்காத தலித் குடும்பத்தை ஒதுக்கி வைத்த கிராமம்- நடந்தது என்ன?

படக்குறிப்பு, பஞ்சமி சந்திரம்கட்டுரை தகவல்தெலங்கானாவில் இறுதி ஊர்வலத்திற்கு பறை அடிக்காததால் ஒரு தலித் குடும்பத்தை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் கௌடோஜிகுடா கிராமத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கிராமத்தில் ‘மாதிகா’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைச் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்க கிராமப் பெரியவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.மேற்படிப்பு படித்து, தங்கள் விருப்பப்படி வேலை செய்யும் தலித் சமூக இளைஞர்களைக் குறிவைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்தச் சம்பவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் மட்டுமின்றி…

அதிவேக 50, 100, 200, 250 – டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை! | India break records for fastest team fifty, hundred, 200 and 250 in Test cricket

கான்பூர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிவேகமாக 50, 100, 200, 250 ரன்களைச் சேர்த்த அணி என்ற புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0…

Udhayanidhi: சட்டமன்றத்தில் மாற்றப்பட்ட இருக்கைகள்; நேரு இடத்தில் உதயநிதி; யார் யாருக்கு எந்த இடம்? | Ministers seats changed in tamilnadu assembly DCM Udhayanidhi in KN Nehru seat

இந்நிலையில், சட்டமன்றத்தில் அமைச்சர்களின் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ஸ்டாலினின் முதல் மற்றும் அவை முன்னவர் துரைமுருகனின் இரண்டாவது இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருக்க, மூன்றாவது இருக்கை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.அதேசமயம், மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்த மூத்த அமைச்சர் நேரு நான்காவது இருக்கைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, 5, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய இருக்கைகள் முறையே அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.தமிழக அமைச்சர்களின் இருக்கை…

IPL 2025: 'ஐபிஎல்-ன் புதிய விதி; எந்தெந்த வீரர்களுக்குத் தடை விதிக்கப்படும்?' – முழு விவரம்

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல்., மெகா ஏலத்துக்கு முன் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு சில முக்கிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது.குறிப்பாக, எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம், வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன, வீரர்களுக்கான சம்பளம், ‘Uncapped’ வீரர் விதி என 8 முக்கிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த 8 விதிகளில் ஒன்றுதான் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்து ஒரு அணியால் வாங்கப்பட்ட ஒரு வீரர், சீசன் தொடங்குவதற்கு முன்பே அந்த சீசனிலிருந்து வெளியேறும்பட்சத்தில் அவர் அடுத்த இரண்டு சீசன்களில்…