உச்சநீதிமன்றத்தில் 30ம் தேதி இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி, ஓபிஎஸ் அவசர ஆலோசனை: நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் முடிவு
சென்னை: இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே வேட்பாளரை அறிவிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எதிர்க்கட்சிகளிடம் தொடர்ந்து குழப்பம் நிலவுவதால், அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.அதிமுகவில் உச்சக்கட்ட மோதல் எழுந்துள்ளது. எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தங்களுக்குத்தான் அதிமுக சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. இந்தநிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.…









