Yearly Archives: 2023

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டி

கோஹிமா: நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி ஒன்றிய தேர்தல் குழு நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நடப்பாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

பூச்சிக்கொல்லி மருந்தால் நஞ்சாகும் தாய்ப்பால்… 111 குழந்தைகள் பலிக்கு காரணம்; ஆய்வில் அதிர்ச்சி! | breast milk led to death of 111 newborns, says study

இந்த ஆய்வில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடும் 130 கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் சைவ உணவு சாப்பிடும் பெண்களை விட அசைவ உணவு சாப்பிடும் பெண்களின் தாய்ப்பாலில் மூன்று மடங்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டறியப்பட்டது. சைவ உணவான காய்கறிகள் மற்றும் பயிர்களில், பல்வேறு வகையான செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு ஊசி மூலம் ரசாயன மருந்துகள் செலுத்தப்படுவதால், இறைச்சி மூலம் அந்த ரசாயனங்கள்…

ஆசிய தடகளத்தில் தமிழக வீரர்கள் 7 பேர் பங்கேற்பு | 7 players from Tamil Nadu will participate in Asian Athletics

சென்னை: 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த இலக்கிய தாசன் (60 மீட்டர் ஓட்டம்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ர வேல் (டிரிப்பிள் ஜம்ப்), சிவசுப்பிர மணியம் (போல்வால்ட்), அர்ச் சனா (60 மீட்டர்…

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.44,040-க்கு விற்பனை

சென்னை: ஒரே நாளில் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90-ம் சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து சவரன் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,955 டாலர் உயர்ந்தது. ஒன்றிய அரசின் வரி விதுப்பும் சேர்ந்ததால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்; அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். பாஜக-வின் ஆதரவு குறித்து நானும் பாஜக தலைமையும் விரைவில் அறிவிப்போம். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே விருப்பம். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக இன்று வரை…

`13 வயதுக்குட்பட்ட 50% குழந்தைகள் மொபைலில் ஆபாசப்படம் பார்க்கிறார்கள்…' ஆய்வில் பகீர் தகவல்!

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. மொபைல் போன்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல், இன்னமும் பட்டன் போனை உபயோகப்படுத்துபவர்களும், போன் வந்தால் அதை அட்டெண்ட் செய்ய மட்டும் தெரிந்தவர்களும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட இலகுவாக மொபைல் போனை கையாள்கிறார்கள்.மொபைல்இந்த வளர்ச்சியானது, வயதுக்கு மீறிக் காணக்கூடாத சில விஷயங்களைப் பார்க்க வைக்கிறது, அடிமையாக்க வைக்கிறது. உடல் நலத்தைத் தாண்டி, மனநலத்தை மொபைல் போன்கள் இன்றைய தலைமுறையிடத்தில் களவாடியிருக்கின்றன. 2022 செப்டம்பர் மாதத்தில், `காமன் சென்ஸ் மீடியா’…

தோனியாக மாறிய ஹார்திக் பாண்டியா.. வெற்றி கோப்பையை பிரித்வி ஷாவிடம் கொடுத்த வீடியோ வைரல்!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியானது நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அணியை…

“என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர நினைக்கிறேன்” – கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு ஈரோடு பிளாட்டினம் மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட காங்., பொறுப்பாளர் திருச்செல்வம் வரவேற்றார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தொல்.திருமாவளவன்மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது, “ஜோடோ யாத்திரை மூலமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்ற ராகுல் காந்தி…

வேட்டியை மடிச்சு கட்டினா… அன்புமணி எச்சரிக்கை

வடலூர்: பாமக சார்பில் நிலம், நீர், விவசாயம் காப்போம் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: என்எல்சிக்கு அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தர வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நிலங்களை எடுக்க துடிக்கிறார்கள். அன்புமணி என்றால் டீசன்ட் அன்ட் டெவலெப்மென்ட் பாலிடிஸ்னு.. நினைக்கிறாங்க, நான் வேட்டியை மடித்து கட்டினால் தாங்க முடியாது- (மேடையிலே வேட்டியை…

1 352 353 354 355 356 419