விவாகரத்து: `25 ஆண்டுகள் வீட்டுவேலை; மனைவிக்கு ரூ.1.7 கோடி கொடுங்கள்’ – கணவருக்கு நீதிமன்றம் உத்தரவு | Man ordered by court to pay ex-wife Rs 1.75 crore over 25 years of unpaid housework
நீதிமன்றம் உத்தரவுஎனவே இருவரும் விவாகரத்து செய்தபோது, சொத்தில் மனைவிக்கு எந்தவொரு பங்கும் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த நீதிமன்றம், 1995 முதல் 2020 வரையில் குறைந்தபட்ச ஊதியம் என்ற அடிப்படையில், 25 ஆண்டுகளாக எந்தவொரு ஊதியமும் இல்லாமல் வீட்டுவேலைகளைக் கவனித்து வந்த மனைவிக்கு 2,04,624 யூரோ (ரூ.1.7 கோடி) செலுத்துமாறு கணவருக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இரண்டு மகள்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகை அளிக்கவேண்டும் எனவும் கணவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர். Source link








