புதுச்சேரி: டெங்கு பாதிப்பால் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் மக்கள்! | Puducherry people shocked by the death of two women due to dengue fever
இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வோர் ஆண்டும் பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னர் மற்றும் பின்னர் நாட்டில்…





