விழுப்புரம்: சுகாதாரமற்ற உணவு விற்கப்படுவதாகப் புகார்… சுவர் ஏறிக் குதித்து சோதனையிட்ட அதிகாரிகள்!|food safety department officials inspected hotels operating near the Villupuram
உணவு பாதுகாப்புத்துறை சோதனைஅதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர், நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனை பகுதிகளிலுள்ள சில உணவகங்களில் ஆய்வுசெய்வதற்காகச் சென்றிருந்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த ஓர் உணவக தரப்பினர், உணவக வாயிலை தார்பாலினால் மூடிவிட்டு உள்ளே பதுங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதையறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தார்பாலின்களை விலக்கிவிட்டு, மதில் சுவர்மீது ஏறிக் குதித்து, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்தனர். சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்அப்போது, அந்த உணவகத்தில் உணவுப் பொருள்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதேபோல் மற்றோர்…






