எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! | A child whose hand was amputated in Chennai Government Hospital died today
மேலும், அந்தக் குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் இந்த நிலைமைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என்று குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினார். ஒன்றரை வயதுக் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தமிழகம் எங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மருத்துவத்துறை சார்பில், சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறதா என்பதை விசாரணை செய்ய மூன்று மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.அமைச்சர் மா.சுப்பிரமணியன்அந்த மருத்துவக் குழுவின் அறிக்கையிலும்,…








