மே 18: இலங்கை உள்நாட்டுப் போரில் பார்வையை இழந்த தமிழீழ முன்னாள் போராளி தற்போது எப்படி இருக்கிறார்?
2 மணி நேரங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 14 வருடங்கள் பூர்த்தியாகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்கால சந்ததி வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு எதிர்கால சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கடல் கரும்புலி போராளியின் செய்தியே இது.தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்த அமைப்பில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் கந்தசாமி…






