ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும். மாலைக்குள் முழு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 286 முதன்மை அலுவலர்கள்,…








