Daily Archives: March 1, 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 15 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியவரும். மாலைக்குள் முழு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 286 முதன்மை அலுவலர்கள்,…

எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? கோவிட் பற்றிய இந்திய மருத்துவச்சங்கத்தின் விரிவான பாட புத்தகம்! | Indian medical association physicians published textbook of future covid

கோவிட் தொற்றில் தீவிரமாகப் பணியாற்றியவரும், இந்திய மருத்துவ சங்க கேரள ஆராய்ச்சிப் பிரிவு துணைத் தலைவருமான மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் இந்தப் பாடப்புத்தக அத்தியாயத்தின் ஆசிரியர்.எதிர்கால கோவிட் பற்றி புத்தகத்தில் கூறப்பட்ட தகவல்கள்:*இதன்பின் வைரஸ் கடுமையான நோயை ஏற்படுத்தாது. நோய் தொற்றுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும் அல்லது லேசாக உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்.*மாறுபட்ட உயிரியல் பண்புகளுடன் புதிய வேரியன்ட்கள் வரலாம். இவற்றை நிராகரிக்க முடியாது. ஏனெனில் பல வைரஸ்களை போல அல்லாமல், SARS COV…

NZvENG: 1 ரன் வித்தியாசத்தில் முடிவு; டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்சியடையச் செய்த ஆட்டம்! | England Vs New Zealand nail biting thriller Test

பொதுவாகவே டி20போல் சிறுகதையாக முடியாமல் விறுவிறுப்பான தருணங்களும், மௌன யுத்தங்களும், தூண்டிலிட்டுக் காத்திருந்து புலிவேட்டையாடும் சாமர்த்தியங்களும் டெஸ்டினை தொடர்கதையாக அடையாளம் காட்டும். ஏற்றஇறக்கங்களும், அபாய வளைவுகளும்தான் டெஸ்டினை உயிர்த்துடிப்போடு வைத்துள்ளன. அவை அத்தனையையுமே இறுதிநாளில் காணமுடிந்தது. 210 ரன்கள்தானே, 90 ஓவர்களும் 9 விக்கெட்டுகளும் கைவசமுள்ளதே என்ற அலட்சியம் சற்றே ஆட்கொள்ள அவர்களது அஞ்சுவது பேதைமை என்னும் புதுமொழியின் உட்பொருளும் முன்செலுத்தியது. நின்று நிதானமாக ஆடியிருந்தால் தாக்குப்பிடித்திருக்க வேண்டிய களத்தில் 80/5 என்ற ஸ்கோரோடு இங்கிலாந்து திணறியது.…

பாசிப்பருப்பு ரொட்டி செஞ்சிருக்கீங்களா..? கண்டிப்பா ட்ரைப் பண்ணுங்க..

இந்தியர்களின் உணவு பட்டியலில் குறிப்பாக தென்னிந்தியாவில் வசிக்கும் மக்களின் உணவு பட்டியலில் பருப்பு வகைகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் இடம் பெற்றுவிடும். பருப்பு வகைகளில் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போகும் பாசிப்பருப்பு வகையானது அதிக அளவில் புரதச்சத்து மிகுந்ததாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்களின் உணவு பட்டியலில் பாசிப்பருப்பானது இடம்பெற்றுள்ளது. இதை வைத்து கிச்சடி போன்ற உணவு வகைகளையும் மக்கள் தயார் செய்கிறார்கள்ஆனால் எப்போதாவது பாசிப்பருப்பு…

கடும் வீழ்ச்சி, விமர்சனத்துக்கு மத்தியில் மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்..!| Elon Musk topped the world’s richest list.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில்  இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்துக்கு வந்தார்.எலான் மஸ்க்இந்நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்த சந்தை நிலவரப்படி  எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 187.1 பில்லியன் டாலராக ஆக உயர்ந்தது.  தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100% அதிகரித்துள்ளது. இதனால் அர்னால்ட்டின் 185.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டினார். அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததால் உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்…

அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.  Source link

உயிர்பிழைக்க 10% மட்டுமே வாய்ப்பு… ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்ட முதியவர்! – சென்னையில் ஆச்சர்யம்

இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்ற சிறப்பு, சென்னைக்கு உண்டு. இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பலவற்றிலும் உயர்தர சிகிச்சை கிடைப்பதால், உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெரும் நம்பிக்கையுடன் சென்னைக்கு வருகின்றனர். அதுபோல, சென்னையைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். இதயம் சார்ந்த பிரச்னை உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே இருந்த நிலையில், ‘இம்பெல்லா’ எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன்…

IND vs AUS 3-வது டெஸ்ட் | ஆடும் லெவனில் இடம்பெறாத கே.எல்.ராகுல்

இந்தியா – ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை. 30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை. நன்றி

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகமதுல்லா சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? காவல்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images12 நிமிடங்களுக்கு முன்னர்ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபரை கத்தியால் குத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்ற ரகமதுல்லா போலீசாரையும்…

நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : திமுக தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்,’என்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து : 70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள்…