டெல்லியில் மாநகராட்சி தேர்தல்; ‘பாக்கெட் இன்ஜினியரிங்’ முறையில் ‘சீட்’ ஒதுக்கீடு: முன்பு ஜாதி… இப்போது மொழியை தூக்கி பிடிக்கும் பாஜக
புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜாதியை தூக்கிபிடித்த பாஜக, தற்போதைய தேர்தலில் மொழியை தூக்கிபிடித்து வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது. தலைநகர் ெடல்லி மாநகராட்சிக்கு உட்பட 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் டெல்லி மாநகராட்சி தேர்தலை பொருத்தமட்டில் காங்கிரஸ் – பாஜக இடையிலான போட்டி தான் இருந்தது. ஆனால் தற்போது ஆளும் ஆம்ஆத்மி -…









