ஒற்றை தலைமை பிரச்னையால் உச்சக்கட்ட மோதல் அதிமுக ஆபிசில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை: ஒற்றைத் தலைமை பற்றிய தீர்மானத்தை சேர்க்க கூடாது என எச்சரித்தார்: சேலத்தில் எடப்பாடியுடன் நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை: ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை சேர்க்கக் கூடாது என எச்சரித்தார். இதற்கிடையில் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.அதிமுகவை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற…









