ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்: அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல்
சென்னை: பொதுக்குழு, ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் கூறினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பிரமுகர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பொதுக்குழு மற்றும் தீர்மானம், ஓபிஎஸ் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய பிறகு…









