Yearly Archives: 2022

cut down 1 gram of salt per day to reduce high blood pressure and heart disease | தினசரி உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தாலே உயர் இரத்த அழுத்தம் , இதய நோய்களை தவிர்க்கலாம்

உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல…

“பிகினி ஆடை படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததால் வேலை இழந்தேன்” – கொல்கத்தா ஆசிரியை விவகாரம் விரிவான தகவல்

கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி23 ஆகஸ்ட் 2022, 08:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நகரில் ஒரு புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மோசமான சர்ச்சையில் சிக்கியது.செயின்ட் சேவியர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியை ஒருவர் பிகினி உடையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக தான் வேலையை விட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பிபிசியிடம் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை பல்கலைக்கழகம்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின்…

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோவிட் -19 பாசிட்டிவ்  என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவே. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக் கோப்பையில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ள அணியுடன் திராவிட் எப்போது சேர முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய ஜிம்பாப்பே ஒருநாள் தொடருக்கு ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்…

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளியை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள்  பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சேதமடைந்துள்ள பள்ளியை திறக்க அனுமதி அளிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. Source link

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி மேல்முறையீடு இன்று விசாரணை: நீதிபதிகள் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று தொடங்குகிறது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி,…

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவை கலைத்தது உச்ச நீதிமன்றம் | Supreme Court dissolved the governing body of the Football Federation of India

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக்குழுவை கலைக்க உச்ச நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் கூட்டமைப்பின் தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றம், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரஃபுல் படேலையும், அவர் தலைமையில் இயங்கிய குழுவையும் கலைத்து உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலை நடத்த முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தாவே தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. இதன்படி…

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்…

உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நன்றி

நாமக்கல்: அடிகுழாயை அகற்றாமல் கான்கிரீட்… தொடரும் கான்ட்ராக்டர்களின் அலட்சியம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களாக சாலையில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் அமைக்கும் போது சாலையில் இருந்த அடிப்பம்பை அகற்றாமல் அலட்சியமாக அப்படியே கான்கிரீட்டை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.அடிபைப்பை அகற்றாமல் சிமெண்ட் தளம்இங்கே கான்கிரீட் அமைக்கும் ஒப்பந்த பணிகளை அ.தி.மு.கவைச் சேர்ந்த…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4,083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு முதல் தான் மாத ஊதியம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கிராமப்பகுதிகளில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் கூட இதைவிட அதிக ஊதியம் வழங்கப்படும் நிலையில்,…

1 261 262 263 264 265 510