பொதுமக்கள் உஷார்… முதல்வர் தனிப்பிரிவு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில்…