`அதிகரிக்கும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை'; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
இல்லாமை, இயலாமையை மறைத்துக் கொண்டு இங்கு பல நடுத்தர குடும்பங்கள், தங்களது அன்றாட வாழ்க்கையை கடந்து வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினரை குறித்த சமீபத்திய ஆய்வுகளின் முடிவை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (PRICE) வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கிறார். இவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாயாக இருக்கிறது.இந்த எண்ணிக்கையானது 2047-ஆம் ஆண்டில் இருமடங்காக இருக்கும். அதாவது மூன்றில் இருவர் நடுத்தர வர்க்கத்தினராக…








