சத்தியமூர்த்தி பவன் அடிதடி விவகாரம்; கையில் எடுக்கும் டெல்லி மேலிடம் தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் கார்கே விசாரணை: கே.எஸ்.அழகிரி மீது 72 புகார்கள்
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி விவகாரத்தை டெல்லி மேலிடம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினேஷ் குண்டுராவ், ஸ்ரீவல்லபிரசாத்திடம் நேற்று அகில இந்திய தலைவர் கார்கே விசாரணை நடத்தினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக தலைமையிடம் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி குறித்து சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின்…
