Monthly Archives: September, 2022

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்; திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியல்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக க.சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்- ச.இனியரசு, துணைச் செயலாளர்கள்-வீ.கோகுலகண்ணன், க.செல்வம், கு.மலர்விழி, பொருளாளர்-…

INDvSA: அற்புதம் நிகழ்த்திய அர்ஷ்தீப்; திணறிப்போன தென்னாப்பிரிக்கா; முதல் போட்டியை வென்றது இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி இந்தப் போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சிறப்பாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றிருந்தது. பெயருக்கேற்றவாறே பிட்ச்சிலும் வழக்கத்தைவிட அதிக புற்கள் நிரம்பியே காணப்பட்டது. பிட்ச் ரிப்போர்ட்டைக் கொடுத்த அஜித் அகர்கரும் எம்பாங்வாவும் நியூ பாலில் பௌலர்களுக்கு உதவக்கூடிய பிட்ச்சாக இருக்கும் என…

பச்சை மிளகாய் மட்டும் வைத்து ஸ்நாக்ஸா..? செஃப் சரண்ஷ் குக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்!

Viral Video | பச்சை மிளகாயை அப்படியே சாப்பிடுவது போன்று மும்பையைச் சேர்ந்த பிரபல சமையல்காரர் சரண்ஷ் கோயிலா வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரலாகிறது. நன்றி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty/MANJUNATH KIRANகாந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பாப்புலர்…

திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். திமுகவில் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டார். பெரும்பாலும் மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே அவர்கள் வகித்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருசில…

Doctor Vikatan: 40 வயதைக் கடந்த எல்லோருக்கும் இசிஜியும் டிரெட்மில் டெஸ்ட்டும் அவசியமா?

Doctor Vikatan: 40 வயது தாண்டியவர்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ECG செய்வது நல்லது? டிரெட்மில் டெஸ்ட் யாருக்குச் செய்ய வேண்டும்? இந்த இரண்டிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்தின் எலக்ட்ரிகல் ஆக்டிவிட்டியை பார்க்கப் பயன்படுத்துவதே இசிஜி. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இந்த இசிஜியில் மாற்றங்கள் இருக்கும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதையெல்லாம்கூட…

ஐசிசி டி 20 கிரிக்கெட் தரவரிசையில் 2-வது இடம் பிடித்தார் சூர்யகுமார் யாதவ் | Suryakumar yadav ranked 2nd in the ICC T20 cricket rankings

துபாய்: ஐசிசி டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டத்தில் 36 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவ், ஐசிசி தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 801 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தை அடைவது இது 2-வது முறையாகும்.…

KKR vs MI IPL 2021: ‘திரிபாதி அரிவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா..’- நாங்கன்னா பயம் வரணும்- கொல்கத்தா அணி புதிய அவதாரம்

அதிரடி வெற்றி மூலம் 8 புள்ளிகள் 0.363 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4ம் இடத்தில் கொல்கத்தா மற்ற அணிகளை அச்சுறுத்துமாறு முன்னேற, ராஜஸ்தான் ராயல்ஸ் 5ம் இடத்தில் இருக்க முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 156 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக 15 ஓவர்களில் விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தான்னா பயம் வரணும்..கொல்கத்தா அணியின் இந்த புதிய ஆக்ரோஷ அதிரடி அவதாரத்தில் ஷுப்மன் கில், ’பேரைக் கேட்டாலே சும்மா…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் பாஜ எம்எல்ஏக்கள்: வீடியோ வைரல்- பரபரப்பு

புதுச்சேரி: பாஜ எம்எல்ஏக்கள் முதல்வர் ரங்கசாமியை வறுத்தெடுக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பாஜ எம்எல்ஏக்கள் சபாநாயகருடனான பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் எம்எல்ஏக்கள்  கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஜான்குமார், பாஜ ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கோலப்பள்ளி அசோக், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில் முதல்வரின் செயல்பாடுகள் குறித்து பாஜ எம்எல்ஏக்கள்…

When Surya started hitting like that, I looked at the dugout. Rohit and Rahul – says virat kohli/ சூரியகுமார் அடிக்க தொடங்கியவுடன் எனக்கு பெவிலியனிலிருந்து சிக்னல் வந்தது

ஹைதராபாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை த்ரில்லிங்காக வெற்றி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது, ஆனால் முன்னதாக சூரியகுமார் யாதவ் சில பிரமிப்பூட்டும் ஷாட்களை ஆட விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து துரிதகதியில் சதக்கூட்டணி அமைத்தனர்.இது “எனது அனுபவத்தைப் பயன்படுத்துவது”, என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடர் வெற்றியின் முடிவில் கோலி  கூறினார், மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல்…

1 2 3 4 5 6 60