15 years of Captain Dhoni: `மறக்குமா நெஞ்சம்' – மாபெரும் தலைவன் உருவான தினம்!
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகப் பெரும்புகழை பெற்றவர் தோனி. சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுமே தோனிக்கான மாஸ் இன்னும் அப்படியே இருக்கிறது. மாபெரும் தலைவனாக கொண்டாடப்பட்ட மகேந்திர சிங் தோனி 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தனது பயணத்தைத் தொடங்கினார். செப்டம்பர் 14, 2007 இல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில்தான் தோனி முதல் முறையாக இந்திய அணியை முன் நின்று வழிநடத்தினார்.…









