Daily Archives: September 25, 2022

அவல் லட்டு, சோளச் சுண்டல், கல்கண்டு சாதம், ரவை பாயசம் | புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | navarathiri weekend special recipes

நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்பால் – ஒரு கப்டைமண்டு கல்கண்டு – ஒரு கப்கிராம்பு – 5ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்முந்திரி – 10திராட்சை – 10நெய் – 50 கிராம்கல்கண்டு சாதம்செய்முறை:கழுவிக் களைந்த…

“அரை மணி நேரம் போதும்; ஆனால் சட்டத்தை கையில் எடுக்க விருப்பமில்லை!”- அண்ணாமலை | bjp tn leader Annamalai slams dmk govt amid continous attacks on bjp cadres

கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவையில் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களிலும் போலீஸார் அலர்ட்டாக இருக்கின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேசத்துக்கு எதிராக பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரை…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போதுதான் நம் இந்தியா முன்னேறும். – முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி* பீகாரில் பாஜவின் ஆட்சி நீக்கப்பட்டதால், அமித்ஷா முழு பைத்தியமாகி விட்டார். 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ படுதோல்வியை சந்திக்கும். – ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு* நாட்டில் வலுவான அடித்தளம் உருவாகி இருக்கிறது. இதனால், முழு உலகமும் இப்போது இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது. – பிரதமர் மோடி* மக்கள் ஆதரவுடன் வேரூன்றி வளர்ந்து வரும்…

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? | doctor vikatan – How much coffee and tea can you drink in a day

Doctor Vikatan: ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கலாம்? எல்லோரும் பொதுவாக 3 – 4 என சொல்கிறார்கள். அளவு எவ்வளவு என்று குறிப்பிடுவதில்லை. அதிக காபி, டீ குடிக்க வேண்டாம் என அறிவுறுத்த அதில் சேர்க்கப்படும் பால் பிரச்னையா அல்லது கஃபைன் பிரச்னையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம் கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்விகடன்காபியோ, டீயோ…. ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது 100…

IND v AUS: கடிவாளம் போட்ட அக்ஸர், எகிறி அடித்த ரோஹித்; 8 ஓவர் போட்டியில் இந்தியா சாதித்தது எப்படி? | India levels the t20 series against Australia by winning the 2nd T20I

ரோஹித் சர்மாBCCIஇந்திய அணியில் ஹர்ஷல் படேல் தனது பலமான ஸ்லோயர் பந்துகளில் இந்த முறை ரன்களை விட்டுக்கொடுத்தார். வேட் சென்ற போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அந்த ஸ்லோயர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர்களுக்கு விரட்டினார். ஆஸ்திரேலியா அணி பௌலிங்கில் அதிகப்படியான ஸ்லோயர் பந்துகளை உபயோகித்தனர். அது அவர்களுக்கு பலன் தரவில்லை. ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசினர். இது ரோஹித் தனது ஆதர்ச புல் ஷார்ட்களை ஆட வழி செய்தது.இரு அணியிலும் ஸ்பின்னர்களான அக்ஸர்…

வாங்கிய கேக் மீந்து போச்சா..? அதை சுவை மிகுந்த டெசர்ட் உணவாக மாற்ற ரெசிபி…

சுவையான கேக் தான், ஆனால் அதைவிட சுவையான சாக்லேட் சேர்த்து வேறு ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்யலாம். நன்றி

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 84 பேர் கைது: கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் – இலங்கை நெருக்கடி

24 செப்டெம்பர் 2022படக்குறிப்பு, கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள்இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு – நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.”இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!” “உடனடியாக பதவி…

சென்னை மாவட்ட திமுக பகுதி செயலாளர்கள் தேர்வு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்துக்கான திமுக பகுதி செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்களை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதில் சென்னை மாவட்ட பகுதி கழகத்துக்கு தேர்வான திமுக நிர்வாகிகள், பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக ரா.லட்சுமணன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி செயலாளர்-எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர்- ரா.செந்தில் குமார், ராயபுரம் மேற்கு…

செரிமானக் கோளாறு சரியாக 6 வழிகள்! | Digestive disorder exactly 6 ways!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய காலகட்டத்தில்  ஒருவருக்கு  ஆற அமர அமர்ந்து   பொறுமையாக  உணவு உண்பதற்கு  எல்லாம் நேரமில்லை என்பதே  நிதர்சனமான உண்மை. எனவே,  உணவை ஏனோதானோ என வாயில் அடைத்துக் கொண்டு ஓடுகிறார்கள்.  இதனால்,  செரிமானக் கோளாறுகளைச்  சந்திக்கின்றனர். அதிலிருந்து   விடுபடவும், செரிமான பிரச்சனைகளை  சரி செய்யவும் எளிய 6 வழிகளை பார்ப்போம்: குளிர்ந்த நீர்உணவு உண்டபின்  உடனே  குளிர்ந்த நீரை  அருந்துவது முற்றிலும் தவறான  ஒன்று.  இப்படி செய்வதனால்  உண்ட உணவு நீரின் குளிர்ச்சியால் …

“இந்த ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு”… – விடைபெற்றார் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ ஜூலன் கோஸ்வாமி | The Chakdaha Express jhulan goswami retired

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில்…