கொடநாடு வீட்டில் யார் ஆட்சியில் கொள்ளை நடந்தது சட்டம், ஒழுங்கை பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்
சென்னை: ஜெயலலிதாவின் கொடநாடு வீட்டில் கொள்ளை யார் ஆட்சியில் நடந்தது. சட்டம், ஒழுங்கைப்பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு என்ன அருகதை இருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: கொங்கு மண்டலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்கள் வெள்ளம் கூடி அவரை வரவேற்றது. இதை எல்லாம் பார்த்து தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பேட்டி என்ற பெயரில் இல்லாததையும், பொல்லாததையும் எடப்பாடி பேசியிருக்கிறார். வெள்ளலூரில் பேருந்து நிறுத்தத்தை கிடப்பில் போட்டு …








