இதயத்திற்கு இதம், நரைக்குத் திரை- செக்கச் சிவந்த மருத்துவர் செம்பரத்தை!| மூலிகை ரகசியம் – 16 |Shoeblack plant medical uses
செம்பரத்தைக் குடிநீர்:தினமும் நீங்கள் பருகும் தேநீர், காபிக்குப் பதிலாக செம்பரத்தைப் பொடியைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். இதனால் தினமும் மலம் முறையாக வெளியேறுவதுடன், வியர்வை நாற்றமும் மறையும். உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சி தரக்கூடிய உற்சாக பானமாகவும் செம்பரத்தைக் குடிநீர் பயன்படும். தேகத்துக்குப் பளபளப்பைக் கொடுத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால் வேனிற்கால பானமாகவும் இதைப் பயன்படுத்தலாம்.செம்பரத்தை மணப்பாகு…மலர்களின் உதவியுடன் செய்யப்படும் இனிப்பான `செம்பரத்தை மணப்பாகு’, உடல் வெப்பத்தைக் குறைத்து பலத்தையும் கொடுக்கும் ஸ்வீட் டானிக்!…







