Daily Archives: July 29, 2022

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்திய கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் உள்ளன. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட…

Doctor Vikatan: தினமும் இரவில் இருமல் மருந்து… பல வருடப் பழக்கத்தில் இருந்து மீள வழி உண்டா? | doctor vikatan – daily Cough syrup dose – Is there a way to recover from this habit

சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸ் என்பது ஒரு விஷயத்தை மனரீதியாக சார்ந்திருக்கும் நிலை. உதாரணத்திற்கு சிலருக்கு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று, சத்து ஊசி போட்டுக் கொள்ளத் தோன்றும். உண்மையில் அவர்களுக்கு உடலில் சத்துக்குறைபாடே இருக்காது. ஆனாலும் வலியச் சென்று மருத்துவரிடம் அதைக் கேட்டுப் போட்டுக் கொள்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த மருத்துவர்கள் மருந்து ஏதும் இல்லாமல் வெறும் டிஸ்டில்டு வாட்டர் ஏற்றிய ஊசியை அவர்களுக்குச் செலுத்துவார்கள். அதிலேயே சம்பந்தப்பட்ட நபர் திருப்தி அடைந்து விடுவார். இருமல் மருந்துக்கு பதில் சுவையான…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம் | indian team tomorrow schedule in commonwealth games cricket hockey and more

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. தொடக்க…

how to avoid food poisoning in monsoon experts reveal

மிகக் கடுமையான உஷ்ணம் கொண்ட கோடை காலத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை அளிப்பதாக மழைக்காலம் இருக்கக் கூடும். ஆனால், அதே சமயத்தில் நீர் சார்ந்த, காற்று சார்ந்த மற்றும் உணவு சார்ந்த நோய்களும் தாக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சுகாதாரமற்ற முறையில் உள்ள உணவுகளில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு, அதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்படக் கூடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் மிகுந்த பாதிப்புள்ளவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், உடல் வலி ஆகியவை உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள்…

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி விதிப்பை ஒன்றியஅரசு கடந்த 1ம் தேதி உயர்த்தியது. வரி விதிக்கப்பட்டது முதல் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது. இந்நிலையில், 21ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும், சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. 22ம் தேதி தங்கம் விலை உயர்ந்தது. 23ம் தேதி ஒரு…

ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17…

‘செஸ் ஒரு சூதாட்டம்’ என நம்பும் தாலிபான்கள்: செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கான் வீரர்களை அனுப்பும் அதிசயம்!

Chess Olympiad: தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர். நன்றி

செஸ் விளம்பரம்: “பிரதமர் புகைப்படம் இடம்பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும்!" – நீதிமன்றம்

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு (ஜூலை 28) நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த செஸ் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் விதமாகத் தலைநகர் சென்னையிலும், வேறு சில மாவட்டங்களிலும் செஸ்…

சொல்லிட்டாங்க…

உலக அரங்கில் இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் தமிழ்மண்ணில் நடக்கிறது. : – புதுச்சேரி ஆளுநர் தமிழிசைதமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. :- பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழ்மொழி, திருக்குறள் மீது பற்றுடையவராக தன்னை முன்னிறுத்தும் பிரதமர் மோடி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோஇந்தியாவில் விரைவில் ‘ஸ்கை பஸ்கள்’ எனப்படும்…