IND vs WI | ரோகித் and டிகே விளாசல்; இந்தியா 190 ரன்கள் குவிப்பு
தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட் செய்து மாஸ் காட்டினார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில்,…









