திருவள்ளூர்: சைட்டிஷ் வாங்குவதில் தகராறு… மது போதையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரௌடி!
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள தொட்டிக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (30). இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். நண்பர்களுடன் வெளியே சென்ற வேலு, செவ்வாய்பேட்டை அருகில் உள்ள சிறுகடல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியிருக்கிறார்கள். மது வாங்கிவிட்டு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.வேலு மது அருந்தும்போது, சைட்டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.…








