Daily Archives: July 11, 2022

எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது; அது கானல் நீராக தான் முடியும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான…

குழந்தைக்கு மாஸ்க் இப்படியா போடுவது? – குவியும் நெட்டிசன்களின் கமெண்டுகள்!|kid wearing adult mask pic goes viral

இதைப் பார்த்த சக பயணி ஜாண்ட்ரே ஒப்பர்மேன் (Jandre Opperman) குழந்தையைப் புகைப்படம் எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “குழந்தை மிகவும் சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் இருந்து இறங்குவதற்காக காத்திருந்தபோது, குழந்தையுடன் ஏற்பட்ட இனிமையான தொடர்பு, இந்தப் பயணத்தை ரசிக்க வைத்தது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதைத் தொடர்ந்து இந்தப் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. “முகம் முழுவதையும் மூடும்படி குழந்தைக்கு மாஸ்க் அணிவித்து கொடுமை செய்துள்ளனர்… பார்க்கவே மிகவும் வருத்தமாக…

சூரியகுமார் யாதவ் சதத்தை பாராட்டும் லெஜண்ட்கள் – News18 Tamil

கடந்த ஆண்டு போராடி தன் இடத்தை இந்திய அணியில் பெற்ற சூரியகுமார் யாதவ் நேற்று அடித்த மறக்க முடியா, நெஞ்சை வீட்டு நீங்கா அதிரடி டி20 சதத்தின் மூலம் இந்தியாவின் 5வது டி20 சதமெடுத்த வீரரானார், அவரது சதம் வெற்றிக்கு இட்டுச் செல்லவில்லை என்பதைத் தவிர வெற்றிக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது, அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு மாபெரும் இதிகாச வெற்றி டி20 விரட்டல் சதமாக இது அமைந்திருக்கும். இதனையடுத்து சூரியகுமார்…

Vitamin K குறைபாட்டை போக்கும் 5 முக்கிய உணவுகள்..! அதற்கான ரெசிபிகளும் உள்ளே…

கொழுப்பில் கரைய கூடிய இந்த வைட்டமின் கே மெனாக்வினோன்ஸ் (menaquinones) மற்றும் ஃபிலோகுவினோன் (phylloquinone) ஆகிய 2 வடிவங்களில் கிடைக்கிறது. நன்றி

“இலங்கை அதிபருக்கு நடந்ததுதான் மோடிக்கும்; ராஜினாமா செய்துவிட்டு ஓடுவார்..!”- திரிணாமுல் எம்எல்ஏ | Like Sri Lankan President Gotabaya Rajapaksa, PM Narendra Modi will also resign and flee: TMC MLA Idris Ali

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உக்கிரத்தில் மக்கள், காலியாகும் தலைமை என இலங்கையின் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ…

போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதலால் பரபரப்பு

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

சுனில் கவாஸ்கர் #AppExclusive

யார் செய்த புண்ணியமோ, நமக்கு ஒரு கவாஸ்கர் கிடைத்திருக்கிறார். இதற்கு முன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ ஆட்டக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ பேர் உருவாக இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கவாஸ்கர் தனித்து நிற்கிறார். அவரோடு ஒப்பிடக் கூடிய வகையில் எந்தப் பெயரும் நம் நினைவிற்கு வருவதில்லை. தான் பெருமை சேர்த்துக் கொள்வதற்காக மட்டும் கவாஸ்கர் ஆடுவதில்லை. தாய்நாடு பெருமை இழந்துவிடக்கூடாது என்ற நினைப்பிலேயே விளையாடுகிறார். சக ஆட்டக்காரர்கள் எதிர்முனையில் வெளிநடப்புச் செய்துகொண்டே இருந்தாலும் இவர் மறு முனையில்…

இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் – காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து கோடி கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு போலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்டை போலிஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்ற அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.பொதுமக்களால் இந்த பணம் எடுக்கப்பட்டு இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் ஊடக பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தப்பட்ட நிலையில்…

வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவோம்: ராமதாஸ் கடிதம்

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மக்களுக்கான உரிமைகளை வென்றெடுத்துக் கொடுப்பதை முழு நேரப் பணியாகவும் கொண்டிருக்கும் கட்சியாகவும் திகழும் பா.ம.க, வரும் 16ம் தேதி 33 ஆண்டுகளை நிறைவு செய்து 34வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்கத் தருணத்தில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முதன்மை நோக்கம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவதும், அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தின்…

IND vs ENG | சூர்யகுமாரின் அபார சதம் வீண்: இங்கிலாந்து வெற்றி

நாட்டிங்கம்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டுக்கு எதிராக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்…