அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால் ஓபிஎஸ்சை ஒற்றை ஆளாக பார்க்கும் அவசியம் ஏற்பட்டு இருக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்தை இப்படி ஒற்றை நபராக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு நேற்று தமிழகம் வந்து அதிமுக, பாமக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்தார். இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள்…









