திராவிட கொள்கையை பின்பற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமரசமின்றி செயல்படுகிறார்: திருச்சியில் வைகோ பேட்டி
திருச்சி: திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்திற்கு பொற்காலம் என்றும், திராவிட கொள்கையை பின்பற்றுவதில் சமரசமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் திருச்சியில் வைகோ தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை. மக்களின் பேராதரவோடு கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிக சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டம் தமிழ்நாட்டின் பொற்காலம். திராவிட…









