725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை
பெங்களூரு: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது மும்பை அணி. ரஞ்சிக் கோப்பை போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின.…







