Daily Archives: June 23, 2022

மின் வாரிய குறைதீர் கூட்டம் – Dinakaran

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு  கோட்ட வாரிய பகுதியில் மின்சார வாரிய குறை தீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டு  குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாரிய மின்சார செயற்பொறியாளர் சரவணதங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் உட்பட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம்  இன்று (23.6.22) காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர்கள்…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சுயமாக செயல்படவில்லை அதிமுக தலைமை குறித்து இயக்குபவர் முடிவு செய்வார்: நெல்லையில் முத்தரசன் பரபரப்பு பேட்டி

நெல்லை: அதிமுக தற்போது சுயமாக செயல்படவில்லை. அதை இயக்குபவர்களே அதன் தலைமை குறித்து முடிவு செய்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுதொடர்பாக நெல்லையில் அவர், அளித்த பேட்டி: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி நடத்தி ஆட்சி செய்தபோது மாநில நலனுக்காக ஒன்றிய அரசிடம் போராடினார். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்தபோது அதை பெறுவதற்காக அண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல் ஜெயலலிதா காவிரி உரிமைக்காக ஒன்றிய…