Daily Archives: June 23, 2022

‘T20 WC அணிக்கு எடுத்தே ஆகணும்’ – தேர்வுக் குழுவுக்கு டிகே தரும் அழுத்தமும் வாய்ப்பும்

எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த முறை டி20 ஃபார்மெட்டில் அவரது கம்பேக் அமைந்துள்ளது. வந்த வேகத்தில் ஒரு அரை சதமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்துவிட்டார். அதற்கு முழுமுதற் காரணம் அண்மையில் முடிந்த 15-வது ஐபிஎல் சீசன்…

Doctor Vikatan வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடுமா? | Does plantain stem juice cure kidney stones?

உடலைக் குளிரச் செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.முள்ளங்கிசிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலட்டாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச்…

பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை: அந்நாட்டு உச்சநீதிமன்றம்

நியூயார்க்: பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் நியூயார்க் நகர் நிர்வாகம் கொண்டுவந்த துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது. Source link

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள் அவரது இல்லத்துக்கு வருகை

சென்னை: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள், நிர்வாகிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிச்சாமி வீட்டுக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். Source link

`குரங்கு அம்மை’க்கு புதிய பெயர் வைக்கப்படும் என அறிவித்துள்ள WHO; என்ன காரணம்? I WHO may change a new name to Monkeypox soon

ஆனால் பெரும்பாலான தொற்று நோய்கள் ஆப்பிரிக்காவில் இருந்துதான் பரவுகிறது என்ற பொதுவான எண்ணம் மக்களிடையே உருவாகி விடுகிறது. குரங்குகளை ஆப்பிரிக்க மக்களோடு தொடர்புபடுத்தி பேசும், பல கடந்த கால கசப்பான வரலாற்று சம்பவங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே எந்த ஒரு நோயையும், குறிப்பிட்ட நாடு அல்லது பகுதியை வைத்து தொடர்பு படுத்தாமல், அந்த தொற்று வைரஸின் பெயரோ அல்லது அதன் திரிபுகளையோ வைத்து குறிப்பிடுவது நல்லது.ஆப்பிரிக்காAPஇதன் அடிப்படையில், ’குரங்கு அம்மை’ தொற்றின் பெயரை மாற்றுவதற்காக 29 அறிவியலாளர்கள் உலக…

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா சொதப்பல் – 5 விக்கெட்டுகள் சரிவு-ஸ்ரேயஸ் அய்யர் டக் அவுட்

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்ட இந்திய அணி லீசெஸ்டர் அணிக்கு எதிராக 4 நாள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்திய அணி சற்று முன் வரை ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் எடுத்து சொதப்பி வருகிறது. நன்றி

explainer bottle gourd poisoning is a fact know how | மக்களே உஷார்… சுரைக்காய் சாறு சயனைடு அளவுக்கு ஆபத்தானதாம்

இந்திய வீடுகளில் பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. இது குக்குர்பிடேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி; வெள்ளரி, பாகற்காய், பூசணி, பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பிற காய்கறிகளும் இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளன.இந்தியாவில் ஹிந்தியில் லௌகி என்றும், ஒடியாவில் லாவ் என்றும், மராத்தியில் துதி என்றும், கன்னடத்தில் சொரேகாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது.…

அக்னிபத்: “விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்தப்படுவீர்கள்!” – khap அமைப்பு எச்சரிக்கை | ‘Agnipath’: Khaps In Haryana Threaten To Socially Isolate Those Who Apply For Defence Recruitment Scheme

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக…

இரட்டைத் தலைமையை ரத்து செய்ய கோரி 2,190 உறுப்பினர்கள் கடிதம்… கடுப்பான ஓபிஎஸ்.. பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். ஜூலை 11ல் பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்,’என்றார். இதைத் தொடர்ந்து,…

வலியில்லை, பயமில்லை; மார்பகப் புற்றுநோயை கண்டறியும் ரத்தப் பரிசோதனை இந்தியாவில் அறிமுகம் |Blood test to detect breast cancer in India

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ரத்தப் பரிசோதனை, இந்தியாவில் ஜூன் 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Easycheck breast என்ற இந்தப் பரிசோதனையைச் செய்ய 6,000 ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்டமாக இந்த ரத்தப் பரிசோதனை, அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்னும் 1,600 ரத்தச் சேகரிப்பு மையங்களிலும் இச்சோதனையைக் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஐரோப்பா போன்ற 15 நாடுகளில், வெவ்வேறு பிராண்டுகளின் பெயர்களில், இச்சோதனை செய்யப்பட்டு வருகிறது. இச்சோதனையின் நம்பத்தன்மை குறித்த சந்தேகம் மக்களுக்கு இருக்கும்.…

1 2 3