புல்லட் பைக், 10 சவரன் கேட்டு டார்ச்சர்; மனைவி தற்கொலை விவகாரத்தில் பெற்றோருடன் போலீஸ் கணவன் கைது!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் வினீத் பாலாஜி. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ஜி-1 காவல் நிலையத்தில் காவலராக இவர் பணியாற்றி வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி, பகுதியைச் சேர்ந்த 25 வயதான முத்து பாண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் ஊட்டி ஜெயில் ஹில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காவலர் குடியிருப்பில் முத்து பாண்டீஸ்வரியின் உடல் தூக்கில்…

