ஐதராபாத்தில் மோடி பேச்சு தெலங்கானாவில் ஆட்சி இனிதான் ஆட்டம் ஆரம்பம்
திருமலை: ‘இனிதான் பாஜ.வின் ஆட்டம் ஆரம்பமாகிறது. தெலங்கானாவில் அடுத்தது பாஜ ஆட்சிதான் அமையும்,’ என்று ஐதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, மாநில முதல்வர் சந்திர சேகர ராவுக்கு பதிலாக…









