நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!!
சென்னை: நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு…








