"கொரோனா காலங்களில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது" – பில் கேட்ஸ் புகழாரம்
உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கோவிட் பெருந்தொற்று குறித்துப் பேசியிருந்தார். அதில் உலககெங்கிலும் உள்ள நாடுகள் எவ்வாறு இந்தப் பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார். அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர் தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் பல கிராமங்களைக் கொண்ட இந்தியா, கோவிட் பெருந்தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.…









