17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் பேசியது என்ன?

Share

வங்கதேசம், தாரிக் ரஹ்மான், அரசியல், வங்கதேச தேசியவாதக் கட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பிய தாரிக் ரஹ்மான்

டாக்காவில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான், “கடவுள் விரும்பினால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம், நமது நம்பிக்கைக்குரிய வங்கதேசத்தை உருவாக்க கடுமையாக உழைப்போம். வரும் நாட்களில், நாட்டை வழிநடத்த யார் முன்வந்தாலும், அவரது தலைமையின் கீழ் வளர்ச்சிக்காகவும், அந்தப் புதிய தலைவர் காட்டிய பாதையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.

தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25 அன்று வங்கதேசம் திரும்பினார்.

“நாட்டின் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் என்னிடம் உள்ளது.” என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், அந்தத் திட்டம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

தனது உரையின் முடிவில், வன்முறையை நிறுத்துமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், ‘நாட்டில் அமைதியைப் பேணுவது நமது பொறுப்பு’ என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com