“100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி போட்ட விதை!” – தமிழ்நாடு கல்வி குறித்து முதல்வர் பெருமிதம் | Tn cm mk stalin speech at coimbatore psg college function

Share

100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

நான் மட்டும் முதல்வன் அல்ல… தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக நம் மாநில இளைஞர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைய சமுதாயம் குறித்த கவலையும் இருக்கிறது. சில இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது கவலையளிக்கிறது.

பி.எஸ்.ஜி கல்லூரி

பி.எஸ்.ஜி கல்லூரி

இளைஞர்களை போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும். அடிமையானவர்களையும் அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். ஒரு மாணவன் அடிமையாவது அவனுக்கு மட்டுமல்ல… அவன் குடும்பத்துக்கு மட்டுமல்ல… மாநிலத்தின் வளர்ச்சிக்கே கவலையாக அமைகிறது. குறிப்பாக, மாணவிகள் சிலரும் அடிமையாவது மேலும் வருத்தத்தை உண்டாக்குகிறது. நல்ல கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்து கல்வி நிறுவனங்களும் உண்டு. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com