இது குறித்து சிறுமியின் தாய் ஏஞ்சலா கூறுகையில், “எனக்கு நினைவிருக்கும் வரை, இவளின் இரண்டாவது வயதில் இருந்தே வெறும் பாஸ்தா மற்றும் Croissant மட்டுமே சாப்பிட்டு வருகிறாள். எப்போதாவது கார்ன்ஃப்ளேக்ஸ், உப்பு சேர்க்கப்பட்ட மொறுமொறு பண்டங்களை சாப்பிடுவாள்.
ஆனால், ஒவ்வொரு நாளும் மதியம் Croissant மற்றும் டின்னருக்கு பாஸ்தாதான் உணவு. இந்தப் பழக்கத்தில் இருந்து அவளை வெளியே கொண்டுவர மிகவும் சிரமப்பட்டேன்.
பிறகு, பத்திரிகையில் வந்த இதேபோன்ற பயத்தைக் குறித்து, டேவிட் கில்முர்ரி என்ற ஹிப்னோதெரபிஸ்ட் எழுதிய கட்டுரையைப் பார்த்தேன்.
பின் அவரிடம் சிகிச்சைக்காக எனது மகளை அழைத்துச் சென்றேன். தற்போது அவளின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் தெரிகிறது. சீன உணவுகள் மற்றும் அன்னாசி போன்ற பழங்களை உண்ணத் தொடங்கியுள்ளாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.