ஸ்ரீவைகுண்டம்: 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரயில்வேயின் உயரிய விருது

Share

ஜாபர் அலி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி

ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சரளைக் கற்கள் முழுவதும் அடித்து செல்லப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றதை அறிந்து, உடனடியாக ரயிலை நிறுத்தி வைத்து, சுமார் 800 பயணிகளை காப்பாற்றிய ரயில் நிலைய (ஸ்டேஷன்) மாஸ்டர் ஜாஃபர் அலிக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், ரயில்வே ஊழியர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ரயில்வேயில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றும் 100 சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு `அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ (Ati Vishisht Rail Seva Puraskar) என்னும் விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வரும் டிசம்பர் 21 ஆம் தேதி 69ஆவது ரயில்வே வார விழாவின் போது வழங்கப்பட உள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

ரயில் நிலைய மாஸ்டர் ஜாஃபர் அலி, ரயிலை நிறுத்தி சுமார் 800 பயணிகளின் உயிரை காப்பாற்றியது எப்படி? அந்த சமயத்தில் என்ன நடந்தது?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com