தவறுதலாக ஸ்பிரிட் அருந்திவிடும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். உடல் உறுப்புகள் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கு உண்டு.
சமீபத்தில், டயாலிசிஸ் சிகிச்சைக்காக 8 வயது சிறுமி ஒருவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்தச் சிறுமி தண்ணீர் கேட்க, அவர் அம்மா அங்கிருந்த ஸ்பிரிட்டை, தண்ணீர் என்று நினைத்து, தவறுதலாகக் குடிக்கக் கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறுமி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடற்கூராய்வு அறிக்கையில், `சிறுமியின் மரணத்துக்கான காரணம், அவர் ஸ்பிரிட் அருந்தியது அல்ல. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் சிறுநீரக செயலிழப்புதான்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்பிரிட் அருந்துவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்…