அதைத் தொடர்ந்து, திருக்காக்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கேரளாவின் கண்ணூரில் ஷவர்மா, மயோனைஸ் ஆகியவை சாப்பிட்டு 16 வயதான தேவநந்தா என்ற மாணவி உட்பட சிலரின் மரணங்களைத் தொடர்ந்து, ஷவர்மா தயாரிக்க சில விதிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. மேலும், முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கக் கூடாது எனவும், காய்கறிகளில் இருந்து மயோனைஸ் தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஹோட்டல்களில் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஷவர்மா சாப்பிட்ட பின்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், கேரளாவில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.